இந்தியாவில் கரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் களுக்கு பொதுமக்கள் தினம் தினம் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

இதற்காக கிரிக்கெட் பிரபலங்கள், வீரர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணி வீரர் ஹனுமா விஹாரி நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

Advertisement

ஹனுமா விஹாரி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் பங்கேற்றுள்ளார். வெகு தொலைவில் இருந்தாலும், தன் தாய் நாடு படும் அவலத்தை பார்த்த அவர், அங்கிருந்து கொண்டே சமூக சேவையில் இறங்கியுள்ளார். இதற்காக ட்விட்டரை தனது கருவியாக பயன்படுத்தியுள்ளார்.

அதன் படி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து 100 பேர் கொண்ட தன்னார்வ குழு ஒன்றை அமைத்துள்ள அவர், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், பிளாஸ்மாக்கள், உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார். தொலைபேசி மூலம் அனைத்து விஷயங்களை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இதுகுறித்து பேசியுள்ள ஹனுமா விஹாரி,“நான் என்னை புகழ்ந்து கொள்ள விரும்பவில்லை. இந்த இக்கட்டான சூழலில் அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதே எனது நோக்கம். இதற்காக உதவி உள்ளம் படைத்த 100 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கினேன். எங்களுக்கு வாட்ஸ் அப்பில் குழு உள்ளது. அதன் மூலம் முடிந்தவரை மக்களுக்கு உதவி புரிய கடுமையாக உழைத்து வருகின்றனர். தனியாளாக இந்த முயற்சியை கையில் எடுத்தேன் தற்போது பல துறைகளில் இருந்தும் எனக்கு உறுதுணையாக வந்து நின்றுள்ளனர். இது வெறும் தொடக்கம்தான்.

இந்த கரோனா  2ஆவது அலை மிகவும் பலமானதாக உள்ளது. மருத்துவமனை படுக்கை கிடைப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கடினமான ஒன்றாக உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ ரீதியாக தேவைப்படும் உதவிகளை செய்வதே எனது குறிக்கோள். எதிர்காலத்திலும் இதனை தொடர்ந்து செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News