ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா - சீனிவாசன்!

Updated: Mon, Oct 18 2021 20:32 IST
CSK’s IPL win to boost T20’s popularity worldwide, says N Srinivasan of India Cements (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. 

இந்நிலையில் இந்த சாம்பியன் கோப்பையை தற்போது இந்தியா கொண்டு வந்து தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து சென்னை அணி நிர்வாகம் பூஜை செய்துள்ளனர். இந்த பூஜையில் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், “கடந்த ஆண்டு தோல்வியடைந்ததால் இம்முறை கோப்பையை கைப்பற்ற முடியுமா ? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தோனி நிச்சயம் சென்னை அணி வெற்றி பெறும் என்று என்னிடம் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது அதே போல நடந்து உள்ளது. 

இந்த உலக கோப்பை தொடரில் தோனி ஆலோசகராக பயணித்ததால் அவர் நிச்சயம் நாடு திரும்பியவுடன் சென்னைக்கு வருவார். அதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பெரிய பாராட்டு விழா நடைபெற உள்ளது. அந்த பாராட்டு விழாவின்போது வெற்றிக் கோப்பையை தோனி முதல்வரிடம் கொடுப்பார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதுமட்டுமின்றி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பாராட்டு விழாவில் சென்னை அணியின் சில வீரர்களும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை