N srinivasan
ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா - சீனிவாசன்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில் இந்த சாம்பியன் கோப்பையை தற்போது இந்தியா கொண்டு வந்து தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து சென்னை அணி நிர்வாகம் பூஜை செய்துள்ளனர். இந்த பூஜையில் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.