ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. இலங்கை அணியில் காயத்தால் விலகிய கேப்டன் ஷனகா, பதிரானா ஆகியோருக்கு பதிலாக சமிகா கருணாரத்னே, லாஹிரு குமாரா சேர்க்கப்பட்டனர்.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா 61, குஷால் பெரேரா 78 ரன்கள் எடுத்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். 

Advertisement

ஆனால் அவர்களைத் தவிர்த்து குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதை தொடர்ந்து 210 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 11 ரன்கள் மற்றும் சுமித் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். 

ஆனாலும் மிட்சேல் மார்ஷ் 52 ரன்கள், மார்னஸ் லபுசாக்னே 40 ரன்கள், ஜோஸ் இங்லிஷ் 58 ரன்கள், மேக்ஸ்வெல் 31 ரன்கள், ஸ்டோனிஸ் 20 ரன்கள் எடுத்து 35.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் அடுத்தடுத்த 2 தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த ஆட்டத்தில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற உதவினார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த 2 சிக்ஸர்களுடன் இந்திய மண்ணில் களமிறங்கிய டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இதுவரை 33 இன்னிங்ஸ்களில் 51 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இதன் மூலம் இந்திய மண்ணில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் பொல்லார்ட் சாதனையை தகர்த்து மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய மண்ணில் களமிறங்கிய 28 இன்னிங்ஸ்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பொல்லார்ட் 49 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அதனை தகர்த்து மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News