தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக சென்சூரியன் நகரில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் தனி ஒருவனாக சதமடித்து 101 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே சுமாராக பந்து வீசிய இந்திய அணியை திறம்பட எதிர்கொண்டு முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

Advertisement

அந்த அணிக்கு அதிகபட்சமாக தம்முடைய கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் அனுபவ வீரர் டீன் எல்கர் சதமடித்து 185 ரன்களையும், மார்கோ ஜான்சென் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் கோட்டை விட்டது.

அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அதிகபட்சமாக நந்த்ரே பர்கர் 4 விக்கெட்களை சாய்த்தார். மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டீன் எல்கர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பந்தை தாமதமாக அடிப்பதே தம்முடைய திட்டமாக இருந்ததாக தெரிவிக்கும் டீன் எல்கர் இந்தியர்கள் தோற்கடிப்பதற்கு கடினமானவர்களாக இருந்ததாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இது ஸ்பெஷல் இன்னிங்ஸ். சில நேரங்களில் வேலையாகாத எங்களுடைய திட்டங்களில் அசத்த விரும்புவோம். ஆனால் இன்றைய போட்டியில் எங்களுடைய திட்டங்கள் வேலை செய்தது. இப்போட்டி மிகவும் கடினமானதால் நீங்கள் திட்டத்தை எளிதாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பந்தின் மீது கவனம் செலுத்தி நேராக அடிக்க வேண்டும். அதே சமயம் பந்தை தாமதமாக அடிப்பது மகத்தானதாக இருக்கும். டோனி, ஜான்சென் ஆகியோருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். 

உங்களுடைய வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை எடுத்தால் தான் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியும். ரபாடா அபாரமாக செயல்பட்டார். ஆனால் பர்கர் தென்னாபிரிக்காவின் ஒளிவிளக்காக இருப்பதை காண்பித்தார். முதல் சில நாட்களில் மழையால் ஈரப்பதமான சூழ்நிலை இருந்தது. 2 போட்டிகளில் முதல் போட்டியிலேயே நீங்கள் தோற்றால் தொடரை வெல்ல முடியாது. இந்தியர்கள் தோற்கடிப்பதற்கு கடினமாக இருந்தார்கள். அடுத்த சில நாட்கள் ரிலாக்ஸ் செய்து மீண்டும் விளையாடுவோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News