ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 222 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 

Advertisement

அப்போது களத்தில் இருந்த ரோவ்மேன் பாவல் முதல் 3 பந்துகளில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார். இந்நிலையில் 3ஆவது பந்தை அவர் எதிர்கொண்ட போது ஃபுல்டாஸுக்கும் மேல் வந்தது போல தெரிந்தது. இதனால் நோ பால் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

Advertisement

ஆனால் நடுவர்கள் நோ பால் எதுவும் கொடுக்காமல், 3ஆவது நடுவரிடமும் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த டெல்லி கேப்பிடல் அணியின் துணை பயிற்சியாளர் பிரவின் அம்ரே நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய களத்திற்கு வந்தார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த செயல் தனக்கு வருத்தத்தை தருவதாக டெல்லி அணியின் மற்றொரு துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடைசி ஓவரில் நடந்த சம்பவம் வருந்ததக்கது. நடுவரின் முடிவு, அது சரியோ தவறோ அவற்றை ஏற்றுகொள்ள வேண்டும். நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய ஒருவர் களத்திற்கு வருவது ஏற்றுகொள்ளக்கூடியது அல்ல. 

நடுவர்கள் தான் விளையாட்டின் போது ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளனர். அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News