சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த பாப் டூ பிளெஸிஸ். சென்னை அணி வீரர்களில் இவருக்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம் என்றுதான் கூறவேண்டும். மற்ற வீரர்களை கூட அவ்வளவாக கேலி கிண்டல் செய்து வருவது வழக்கமான விஷயம். ஆனால் இவருக்கு அவ்வளவாக கேலி கிண்டல்கள் வராது. 

Advertisement

இவர் சமீபத்தில் தான் விளையாடிய கிரிக்கெட் வீரரகளுள் இந்த வீரர் தான் மிகச்சிறந்த பினிஷர் வீரர் என ஃபாப் டூ பிளேஸிஸ் கூறியுள்ளார். 

Advertisement

டூ பிளெஸிஸ் இடம் நீங்கள் விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்த பினிஷர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இவரிடம் அந்த கேள்வி கேட்டவுடன் அடுத்த நிமிடமே டி வில்லியர்ஸ் தான் மிகச்சிறந்த பினிஷர் என்று அவர் கூறுவார் என்று நினைத்த வேளையில் எதிர்பாராதவிதமாக மகேந்திர சிங் தோனியின் பெயரை அவர் கூறினார். அவர் கூறியதில் அவ்வளவு பெரிய ஆச்சரியம் இல்லை. 

ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் ஒரு மிகச்சிறந்த பினிஷர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவுக்காக விளையாடும் போதிலும் சென்னை அணிக்காக விளையாடும் போதிலும் இறுதி ஓவர்களில் வந்து மிக அற்புதமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்வதில் மகேந்திர சிங் தோனி ஒரு ஆகச் சிறந்த பேட்ஸ்மேன்.

மகேந்திர சிங் தோனி எந்த அளவுக்கு அதிரடியாக விளையாடுவார் என்று கூற வேண்டும் என்றால், இதுவரை 106 ஐபிஎல் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சிக்சர் அடித்த ஒரே வீரர் இவர் மட்டும்தான். வேறு யாரும் இந்த அளவுக்கு சிக்ஸர்கள் அடித்தது கிடையாது. அதேபோல் இறுதி ஓவர்களில் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இதுவரை 162 சிக்சர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக போல்லார்டு 135 சிக்ஸர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் 20 வது ஓவரில் மகேந்திர சிங் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 244 ஆகும். அதைப்போல இறுதி ஓவர்களில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அதிக ரன்கள் குவித்த ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி மட்டும்தான். இதன் காரணமாகவே டூ பிளேஸிஸ் மிகச் சிறந்த பினிஷர் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News