Ab de villiers
ஆசிய, உலகக்கோப்பையில் யார் அதிக ரன்கள் அடிப்பார்கள்? எபிடி வில்லியர்ஸ் பதில்!
தற்பொழுது ஆசியக் கோப்பைத் தொடர் முதல் முறையாக ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 19ஆம் தேதி முடிவடைகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வருகின்ற காரணத்தினால், வரவேற்பு குறைந்து இருந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு தற்பொழுது ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. மிக முக்கியமாக உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக அடித்திருக்கும் 49 சதங்களை முந்தி உலகச்சாதனை செய்வதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.