இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களிலும், அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 263 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 156 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டாகி, 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட்நேர முடிவில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பதும் நிஷங்கா 53 ரன்களுடனும், குசால் மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்னே இரண்டு இன்னிங்ஸிலும் 10 ரன்களைக் கூட தாண்டாமல் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இருப்பினும் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அந்தவகையில் கருணரத்னே இப்போட்டியில் 10 ரன்களைச் சேர்த்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை எட்டினார்.

இதன்மூலம் இலங்கை அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் எனும் பெருமையை திமுத் கருணரத்னே பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா, மஹெலா ஜெயவர்த்னே, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். இதுவரை இலங்கை அணிக்காக இதுவரை 94 டெஸ்டில் 180 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள திமுத் கருணர்த்னே 40.50 சராசரியில் 7,007 ரன்களை எடுத்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News