எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 40 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். 

Advertisement

இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ரூபின் ஹர்மன் 28 ரன்களையும் சேர்த்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் டோனோவன் ஃபெரீரா மற்றும் லுதோ சிபம்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

Advertisement

அதேசமயம் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 87 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு எஸ்ஏ20 லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்க்கவிட்டத்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுதவிர்த்து எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த தினேஷ் கார்த்திக், தற்போது இத்தொடரை அரைசதம் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 

இதுதவிர்த்து இப்போட்டியில் 14ஆவது ஓவரை சூப்பர் கிங்ஸ் தரப்பில் விஹான் லூப் வீசிய நிலையில் அந்த ஓவரின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களைப் பதிவுசெய்தும் மிரட்டினார். இதன்மூலம் அந்த ஓவரில் மொத்தமாக அவர் 22 ரன்களைச் சேர்த்தும் அசத்தினார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News