இலங்கை அணி சமீப காலத்தில் இந்திய அணியிடம் மிக மோசமான தோல்விகளை பெற்று வருகிறது. குறிப்பாக எந்த அணியிடமும் பெறாத அளவிற்கான படுதோல்விகளாக அவை அமைந்திருக்கின்றன. நேற்றைய போட்டிக்கும் முன்பாக ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்து 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.

Advertisement

நேற்று உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சில் 357 ரன்கள் கொடுத்துவிட்டு, திரும்ப பேட்டிங் செய்ய வந்து 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சி அளித்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார்கள். இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் இங்கிலாந்தை வெல்வதும் பிறகு வந்து ஆப்கானிஸ்தானிடம் தோற்பதுமாக தான் இருக்கிறார்கள். 

Advertisement

இதுகுறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் தரப்பிலிருந்து பேசிய நவீத் நவாஸ், “இது நிச்சயமாக கவலைக்குரிய ஒரு விஷயம்தான். ஆனால் நான் இதை இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சியாகப் பார்க்கவில்லை. எங்களிடம் 100 ஒருநாள் போட்டிகள் விளையாடிய சில வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மீதம் பெரும்பான்மையானவர்கள் இளம் கிரிக்கெட் வீரர்கள். நாங்கள் இருக்கும் நிலையில் இருந்து இது மறுக்கட்டு அமைப்பு செய்வதற்கான நேரம்.

பல இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளே வந்து தற்பொழுது நான் சொல்லிக் கொண்டிருப்பதை கற்று தேர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே எங்கள் குழுவிற்கு இன்னும் அற்புதமான வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்து எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தற்பொழுது இதுதான் எங்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை. பாகிஸ்தானில் 2015 ஆம் ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் வரவேண்டும்.  இதற்கு நாங்கள் எங்களுடைய வீரர்களை ஊக்குவிக்க ஒரு காரணியை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே தான் எங்களுக்கு உலகக் கோப்பைக்கு வருவதற்கான உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கும் நடந்தது. எங்களிடம் அழகான இளம் அணி இருக்கிறது நாங்கள் நிச்சயம் மீண்டு வருவோம்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News