Emerging Asia Cup 2024: அபிஷேக், ரஷிக் அசத்தல்; யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!

Updated: Mon, Oct 21 2024 22:48 IST
Image Source: Google

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்ததின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யன்ஷ் சர்மா - மயங்க் ராஜேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆர்யன்ஷ் ஒரு ரன்னிலும், மயங்க் ராஜேஷ் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய ராகுல் சோப்ரா ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் அவருடன் இணைந்து விளையாடிய நிலான்ஷி கேஸ்வானி 5 ரன்னிலும், விஷ்னு சுகுமாரன் ரன்கள் ஏதுமின்றியும், ஹைதர் அலி 4 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ராகுல் சோப்ராவுடன் இணைந்த கேப்டன் பசில் ஹமீத்தும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பசில் ஹமீத் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து கள்மிறங்கிய சஞ்சித் சர்மா, முகமது ஃபரூக், முகமது ஜவதுல்லா ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் சோப்ரா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இறுதியில் ராகுல் சோப்ரா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஐக்கிய அரபு அமீரக அணியானது 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷிக் தார் சலாம் 3 விக்கெட்டுகளையும், ரமந்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 8 ரன்களில் விக்கெடை இழந்தார். 

அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் திலாக் வர்மா 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் சிரப்பாக விளையாடி வந்த அபிஷேக் சர்மாவும் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் நெஹல் வதேரா 6 ரன்களையும், அதிரடியாக விளையாடிய ஆயூஷ் பதோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்தியா ஏ அணி 10.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரஷிக் தர் சலாம் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை