இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களிலும், இங்கிலாந்து 290 ரன்களளையும் எடுத்தது.
அதன்பின் 99 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸைத் விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர், ரிஷப் பந்த் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்களைச் சேர்த்தது.
இதில் ரோஹித் சர்மா 121 ரன்களையும், ஷர்துல் தக்கூர் 60 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்காக 368 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஹாசீப் அமீத் - ரோரி பர்ன்ஸ் இணை அற்புதமான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரோரி பர்ன்ஸ் 31 ரன்களுடனும், ஹாசீப் ஹமீத் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.