இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி டாமி பியூமண்ட் 7 ரன்களிலும், எம்மா லாம்ப் 12 ரன்களிலும், சோபியா டாங்க்லி 29, ஆலிஸ் கேப்ஸி 19 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த டேனியல் வையட் - ஆலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வையட் 43 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஆலிஸ் கேப்ஸி அரைசதம் கடந்து அசத்தினார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 228 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக பேட்டிங் செய்து 91 ரன்களை குவித்தார். சிறப்பாக பேட்டிங் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வெர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அதன்பின்னர் களமிறங்கிய யஸ்திகா பாட்டியா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். யஸ்திகா 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 74 ரன்களை குவித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

இதன்மூலம் 45ஆவது ஓவரில் இலக்கை அடித்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News