தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லாரா வோல்வார்ட் - லாரா குட்ஆல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குட்ஆல் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ்க்கும் 19 ரன்களுடனும் நடையைக் கட்டினார். இதற்கு மத்தியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் வோல்வார்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய மரிஸான் கேப் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடியா நிலையில், மறுபக்கம் களமிறங்கிய நதின் டி கிளார்க் 14 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய அன்னேரி டெர்க்சன் 13 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மரிஸான் கேப்பும் 38 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் அலிஸ் கேப்ஸி, சார்லீ டீன், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியில் நடைபெறுவதில் தமாதமானது. அதன்பின் தொடங்கிய இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 23 ஓவர்களில் 152 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. பின் இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணியில் டாமி பியூமண்ட் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் மையா பௌச்சர் 4 ரன்னிலும், நாட் ஸ்கைவர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹீதர் நைட் 6 ரன்னிலும், டேனியல் வையட் 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் பியூமண்டுடன் இணைந்த ஏமி ஜோன்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் பியூமண்ட் அரைசதம் கடந்ததுடன் 65 ரன்களையும், ஏமி ஜோன்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News