ENG vs IND: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் முக்கிய வீரர் காயம்!

Updated: Wed, Aug 18 2021 12:02 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இதற்கிடையில் இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் தோள்பட்டையில் காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது நிலை குறித்து ஆலோசித்து வருவதாகவும், அவர் விளையாடுவது குறித்த முடிவுகளையும் விரைவில் அறிவிப்போம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::