மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது இங்கிலாந்து!

Updated: Sun, Mar 27 2022 10:57 IST
Image Source: Google

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் சோஃபியா டாங்க்லி அரைசதம் அடித்து அசத்தினர். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோஃபி டாங்க்லி 67 ரன்களையும், நடாலி ஸ்கைவர் 40 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 134 ரன்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக லதா மந்தல் 30 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லஸ்டோன், சார்லட் டீன் தலா 3 விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடம், மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை