பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Thu, May 23 2024 12:40 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்த போது ரோவ்மன் பாவெலின் அசாத்தியமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலியும் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் கேமரூன் க்ரீன் 27 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் அதிரடியாக விளையாடி ராஜத் பட்டிதார் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மஹிபால் லாம்ரோரும் 32 ரன்கள் எடுத்த நிலைடில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்வப்நில் சிங், கரண் சர்மா ஆகியோர் ஒருசில் பவுண்டரிகளை அடிக்க ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - டாம் கொஹ்லர் காட்மோர் இணை அதிரடியான தொடாக்கத்தைக் கொடுத்தனர். இதில் கொஹ்லர் காட்மோர் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதத்தை நெருங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 45 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சனும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 36 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ரோவ்மன் பாவெல் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளெசிஸ், “இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதுபோன்ற மைதானத்தில் நாங்கள் பேட்டிங்கில் கூடுதலாக 20 ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் எங்களால் அதனை செய்ய முடியவில்லை. நீங்கள் இந்த பிட்ச்சை பார்த்து ஒரு 180 ரன்களை வெற்றிபெறக் கூடிய ஸ்கோர் எனலாம். முதலில் பந்து கொஞ்சம் திரும்புகிறது. அதன்பிறகு பிட்ச் ஸ்லோ ஆகிறது என்பதால் இப்படி ஒரு ஸ்கோரை நீங்கள் கணிக்கலாம்.

ஆனால், இயல்பான டி20 சூழலில் நம்மால் இதுதான் வெற்றி பெறக்கூடிய ஸ்கோர் என சொல்லிவிட முடியும்.  எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக போராடினார்கள். அதுதான் முக்கியம். நிறைய அணிகளால் இதை செய்திருக்க முடியுமா என தெரியவில்லை. நாங்கள் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளோம். வந்தோம். இன்றைய நாளில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அந்த கூடுதல் 20 ரன்களை எங்களால் அடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை