இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Advertisement

முதலாவது டி20 போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 211 ரன்களை குவித்தாலும் பந்துவீச்சில் சரிவர திட்டங்களை செயல்படுத்தாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றும் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் 400 ரன்களுக்கு மேல் இரு அணிகளும் குவித்தும் தனக்கு கொடுக்கப்பட்ட நான்கு ஓவர்களில் 35 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்த இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கானை இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “ஆவேஷ் கான் நிறைய திறமை உடைய பந்துவீச்சாளராக திகழ்கிறார். அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. அதேபோன்று இக்கட்டான வேளைகளில் முக்கியமான ஓவர்களை வீசும் தாராள மனசும் அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் தன்னைத் தானே முன்னேற்றிக் கொண்டு வருகிறார்.

இளம் வீரரான அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 உலகக் கோப்பைக்கு ஒரு கண் வைத்துள்ளார். நிச்சயம் அவர் ஒரு மிகச்சிறப்பான பவுலர் என்று நான் கூறுவேன். ஏனெனில் இளம் வீரரான அவர் தனது கடின உழைப்பை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

அவரை ஒரு டி20 பவுலராக மட்டும் பார்க்க வேண்டாம். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக சாதிப்பார். அவருடைய தன்னம்பிக்கையான பந்துவீச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்திய அணியில் வெகுவிரைவில் அவர் மூன்று பார்மெட்டிலும் மிகச் சிறப்பான வீரராக மாறுவதை நாம் காண தான் போகிறோம்.

தற்போது உள்ள அணியில் சிறப்பான வீரர்கள் பலர் இருப்பதால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் தான். அடுத்த தலைமுறைக்கான பந்துவீச்சாளர்கள் தற்போது தயாராகி வரும் வேளையில் ஆவேஷ் கான் இதில் மிக முக்கிய பங்கினை வகிப்பார்” என தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News