இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில்வில் யங், ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் ரன்களைச் சேர்க்க தவாறியதன் காரணமாக, அந்த அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் 30 ரன்களையும், ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்களையும் ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதனைத்தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷாங்காவைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நியூசிலாந்து அணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

இருப்பினும் இறுதிவரை போராடிய நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க இலங்கை அணியின் தோல்வியும் உறுதியானது. இதனால் இலங்கை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் லோக்கி ஃபெர்குசன், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இத்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து டி20 தொடரை 1-1 சமன் செய்தது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட லோக்கி ஃபெர்குசன் ஆட்டநாயகன் விருதையும், வநிந்து ஹசரங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் அதனை கட்டுப்படுத்தி அசத்தினார். 

 

அதன்படி, இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய கிளென் பிலீப்ஸ் அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே அரைசதம் கடந்து விளையாடி வந்த பதும் நிஷங்காவை வெளியேற்றி இலங்கை அணிக்கு அழுத்தத்தை அதிகரித்தார். அதன்பின் களமிறங்கிய மதிஷா பதிரானாவும் முதல்பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்த பந்தை எதிர்கொண்ட நுவான் துஷாரா சிங்கிள் எடுத்து மறுபக்கம் சென்றார். இதனால் இலங்கை அணிக்கு கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 

Advertisement

அச்சமயத்தில் பிலிப்ஸ் வீசிய 5ஆவது பந்தை மஹீஷ் தீக்ஷனா சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பேட்டை சுழற்றிய நிலையில் அவரலால் அந்த பந்தை சிக்ஸருக்கு அடிக்க முடியாவில் மிட்செல் ஹெயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் கிளென் பிலீப்ஸ் அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் கிளென் பிலீப்ஸின் இந்த அபார்மான பந்துவீச்சு குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News