ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி கடைசி ஓவர் வரை சென்று விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் 95 ரன்கள், சாம்சன் 66 ரன்கள் அடித்து கொடுக்க 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.

Advertisement

இந்த இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் அன்மோல்பிரீத் சிங் இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டர் கிளாஸன் மற்றும் கிளீன் பிலிப்ஸ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி கிட்டத்தட்ட இலக்கை நெருங்க உதவினர். குறிப்பாக போட்டியின் 19 ஓவரில் கிளென் பிலிப்ஸ் 22 ரன்கள் குவித்து மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

Advertisement

கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இருந்தபோது, கடைசி ஓவர் கடைசி பந்தில் நோ-பால் வீசி சந்தீப் சர்மா டிவிஸ்ட் கொடுக்க, அப்துல் சமாத் அதை பயன்படுத்தி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்தார். இறுதியாக, ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 7 பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டத்தை ஹைதராபாத் அணியின் பக்கம் திருப்பிய கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

அப்போது பேசிய அவர், “இது போன்ற போட்டியில் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் முடிந்திருக்கலாம். எங்களது பக்கம் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இருக்கும் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முனைகின்றனர். அதைத்தான் அணியும் எதிர்பார்க்கிறது. இன்றைய போட்டியில் விளையாடிய விதத்தினால் பலன் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

நான் அவுட்டான பந்து ஸ்லாட்டில் இருந்தது. அடித்து எல்லைகொட்டுக்கு வெளியே அனுப்பியிருக்க வேண்டும். அது முடியாமல்போனதால், நான் ஆட்டம் இழந்த பிறகு மிகுந்த வருத்தத்துடன் இருந்தேன். ஏனெனில் கடைசி ஓவரில் 17 எண்கள் தேவைப்பட்டது. நிறைய ரன்களை மிச்சம் வைத்து விட்டோம் என்று நினைத்து வருந்தினேன்.அப்துல் சமாத் இதற்காகத்தான் அணியில் பினிஷர் ஆக இருக்கிறார். அதை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். கண்டிப்பாக லக் எங்கள் பக்கமே இருந்தது. அதையும் குறிப்பிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News