இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் 150 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் - தினேஷ் கார்த்திக்

Updated: Wed, Aug 18 2021 19:27 IST
Image Source: Google

இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா சூழல் காரணமாக  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் நடைபெறவுள்ளது. 

இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் புகழ்ந்து கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டி கடந்த 14 வருடங்களாக நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் ஏராளமான டி20 அனுபவங்களைக் கொண்ட வீரர்கள் உள்ளார்கள். 150 முதல் 200 டி20 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு உள்ளது. 

இதனால் முக்கியமான தருணங்களில் இருந்து போதுமான தகவல்களை அவர்கள் பெற்றுள்ளார்கள். பெரிய தொடர்களில் அழுத்தமான தருணங்களைக் கையாள இந்த அனுபவம் அவசியமாகிறது. எனவே இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை