எங்கள் பேட்டிங் துறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!

Updated: Mon, Jul 29 2024 15:05 IST
Image Source: Google

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது குசால் பெரேரா, பதும் நிஷங்கா ஆகியோரது ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. இதில் குசல் பெரெரா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்களையும், பதும் நிஷங்கா 32 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபடத்து. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படை இந்திய அணிக்கு 8 ஓவர்களீல் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்களையும், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸச்ர் என 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார். 

இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா, “இந்த போட்டியில் நாங்கள் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்த விதம் மற்றும் நான் உட்பட எங்கள் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டர்கள் விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் ஒரு அணியாக பேட்டிங்கில் உண்மையில் முன்னேற வேண்டும். இந்த ஆடுகளத்தில், பந்து பழையதாகும்போது, ​​பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆனால் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக நாம் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம். நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததன் காரணமாக15-18 ரன்கள் பின்தங்கியிருந்தோம். துரதிருஷ்டவசமாக இப்போட்டின் நடுவே மழை பெய்ததன் காரணமாக எதிரணியை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் ஈரமான அவுட்ஃபீல்டுடன் 8 ஓவர்களில் இந்த இலக்கை எட்டுவது என்பது எளிதான ஒன்று தான்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை