ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான் போன்ற தரமான வீரர்கள் இரு அணிகளிலும் நிறைந்திருப்பதால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் இவ்விரு அணிகளின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரில் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

Advertisement

முன்னதாக 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடிக்கும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2013இல் விடைபெற்ற சச்சினின் இடத்தை நிரப்பும் அளவுக்கு ரன் மெஷினாக உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 34 வயதிலேயே 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 25,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 75 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வருகிறார்.

மறுபுறம் 2017இல் அறிமுகமாகி 2019க்குப்பின் 3 வகையான நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் சமீப காலங்களில் பாகிஸ்தானின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றி தரமான பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்து வருகிறார். ஆனால் அதற்காக வெறும் 5 வருடங்கள் மட்டுமே அசத்திய அவரை 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் விராட் கோலியை விட சிறந்தவர் என்று அந்நாட்டை சேர்ந்தவர்கள் மனசாட்சியின்றி ஒப்பிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தம்மை விட மூத்தவரான விராட் கோலியை விட தாம் சிறந்தவர் என்று ஒப்பிடுவது சரியல்ல என பாபர் அசாம் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலியிடம் நிறையவற்றை கற்று முன்னேறி வருவதாக தெரிவிக்கும் அவர் அதைப் பற்றியும் தங்களுக்கு இடையேயான நட்பை பற்றியும் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இது போன்ற விவாதங்கள் ரசிகர்களிடம் மட்டுமே இருப்பதை நான் விரும்புகிறேன். அதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கருத்துக்கள் இருக்கும். சீனியர் வீரர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் மதிக்க வேண்டும் என்பதே என்னைப் பொறுத்த வரை முக்கியமானதாகும். நான் விராட் கோலியிடம் நிறையவற்றை கற்றுள்ளேன். 

Advertisement

என்னுடைய கேரியரில் விளையாட துவங்கிய போது அவருடைய நிறைய பேட்டிகளை கேட்டுள்ளேன். குறிப்பாக 2019இல் நான் கேட்ட சில சந்தேகங்களுக்கு அவர் சொன்ன பதில்கள் எனக்கு நிறைய உதவியுள்ளது. அதைப் பற்றி நான் இங்கே சொல்ல முடியாது. எங்களிடம் நல்ல நட்பு இருக்கிறது. மேலும் இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களிடமும் நாங்கள் நட்பு கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News