அஸ்வின் போன்ற ஒருவரை எனது டி20 அணியில் வைத்திருக்க மாட்டேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Updated: Thu, Oct 14 2021 22:05 IST
I Would Never Have Somebody Like Ashwin In My T20 Team, Says This Ex Cricketer (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்த தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை டெல்லி அணி இருமுறை தவறவிட்டது. அதாவது முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணியிடமும், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தா அணியிடமும் டெல்லி அணி தோல்வியடைந்து வெளியேறியது.

லீக் சுற்றுகளின் முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தியிருந்த வேளையில் பிளே ஆப் சுற்று போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று இந்த தொடரில் இருந்து வெளியேறியது டெல்லி அணிக்கு மிக மோசமான விசயமாக மாறியது. 

இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் 20 ஆவது கடைசி ஓவரை அஸ்வின் வீசியது தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளத்தின் மூலமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டெல்லி அணியின் தோல்வி குறித்து கூறுகையில் “இந்த போட்டியில் மட்டுமல்ல அஸ்வின் கடந்த 5 ஆண்டுகளாகவே ஒரே மாதிரியாகத்தான் பந்து வீசுகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பான வீரர் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் டி20 போட்டிகளில் பொறுத்தவரை அவர் வேலைக்கு ஆகமாட்டார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அஷ்வின் பந்துவீச்சில் முன்னேற்றங்களும், மாற்றங்களும் தேவை. என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள டி20 போட்டிகளில் மைதானத்துக்கு ஏற்றார்போல் செயல்படுபவர்களாக சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, சாஹல் போன்றவர்களே சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். எனவே அஸ்வின் டெல்லி அணியில் இருப்பதில் எந்த பயனுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை