Ipl 2021 news
எனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் - மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் 14ஆவது சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல்லில் 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய 4 சீசன்களில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது.
ஐபிஎல் 13ஆவது சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கே முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அந்த படுதோல்வியிலிருந்து மீண்டெழுந்து, 14ஆவது சீசனில் கோப்பையை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸூக்கு (5 முறை) அடுத்தபடியாக அதிகமுறை (4) கோப்பையை வென்ற அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார அணியாகவும், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாகவும் திகழ்கிறது சிஎஸ்கே.