ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 209 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இலங
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசல் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 125 ரன்களைச் சேர்த்தி அசத்தினர்.
பின் 61 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்கா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 78 ரன்களில் குசால் பெரேராவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் குசால் மெண்டிஸ் 9 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்களுக்கும் என அட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா ஒருபக்கம் விக்கெட் இழக்காமல் களத்தில் இருக்க, மறுபக்கம் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 7, துனித் வெல்லாலகே 2, சமீகா கருணரத்னே 2, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் இறுதிவரை களத்தில் இருந்த சரித் அசலங்காவும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.