அண்டர் 19 உலகக்கோப்பை: இந்திய அணி கேப்டன், துணைக்கேப்டனுக்கு கரோனா!

Updated: Wed, Jan 19 2022 21:40 IST
ICC U19 WC: India captain Yash Dhull, deputy SK Rasheed test positive for COVID-19 (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தில் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இத்தொடரில் இன்று நடைபெறும் குரூப் பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணைக்கேப்டன் எஸ்கே ரஷித் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக நிஷாந்த் சந்து செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அண்டர் 19 அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை