நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் - குசால் மெண்டிஸ்!

Updated: Thu, Oct 26 2023 20:27 IST
நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் - குசால் மெண்டிஸ்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் பெரிதளவில் சோபிக்காததால் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி 25.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தங்களுடைய அணி அடுத்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றால் அரையிறுதிக்கு சென்று விடுவோம் என்று இலங்கை கேப்டன் குஷால் மண்டிஸ் உற்சாகத்துடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மேத்யூஸ் அணிக்கு திரும்பி அசத்தியுள்ளது வலுவை சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து பேசிய அவர், “ரன்ரேட் அணிக்கு நல்லது. நாங்கள் பந்து வீச்சில் அசத்தியதை போல இன்று எங்களுடைய அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பெற்றால் நாங்கள் அரையிறுதியில் இருப்போம். அந்த போட்டியிலும் எங்களுடைய வீரர்கள் அசத்தினார்கள். குறிப்பாக இன்று அசத்திய குமாரா 140 – 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய எங்களுடைய முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

அவர் இன்று வலுவாக செயல்பட்டதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். மேத்தியூஸ் சிறப்பாக பந்து வீசியதை போலவே பேட்டிங்கிலும் அழுத்தமான சூழ்நிலையில் அசத்தும் தன்மை கொண்டவர். அவருடன் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எங்களுடைய ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது இதை நாங்கள் அடுத்த 4 போட்டிகளில் தொடர விரும்புகிறோம்” எனதெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை