ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே, உர்வில் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விளையாடிய ஆயூஷ் மாத்ரே 43 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 42 ரன்களையும், ஷிவம் தூபே 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும், வைபவ் சூர்யவன்ஷி 57 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி, “நாங்கள் பேட்டிங் செய்த விதம் அது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததன் காரணமாக அது நடுத்தர வரிசையில் அழுத்தம் கொடுப்பதுடன், 20 ஓவர்கள் முழுவது பேட்டிங் செய்யாமல் போனது. இன்றைய ஆட்டத்தில் டெவால்ட் பிரீவிஸின் பேட்டிங் மிகவும் நன்றாக இருந்தது. அவர் தனது வாய்ப்புகளை எடுத்துக் கொண்டதன் காரணமாக, அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.

இருப்பினும் நாங்கள் 2 விக்கெட்டுகள் இழந்ததன் காரணமாக எங்களால் இன்னும் சில ரன்களைச் சேர்க்க முடியாமல் போனது. அதேபோல் அன்ஷுல் கம்போஜை பொறுத்தவரையில் அவர் பந்தை ஸ்விங் செய்யவில்லை என்றாலும், அவரது சீம் சிறப்பாக இருந்தது. மேலும் பொறுப்பை ஏற்ற அவர் நல்ல யார்க்கர்களையும் வீசக்கூடிய ஒருவராக உள்ளார். மேலும் நாங்கள் பவர்பிளேவில் அதிக ரன்களைக் கொடுக்க விரும்பாததன் காரணமாகவே அவருக்கு மூன்று ஓவர்களை வழங்கினோம்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

மேலும் பந்து அதிகம் ஸ்விங் ஆகாத போது பேட்ஸ்மேன்கள் அதனை எதிர்கொள்வது கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் 200 ஸ்ட்ரைக்-ரேட்டைத் தேடும்போது நிலைத்தன்மையைப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், பேட்ஸ்மேன்கள் தங்களைத் தாங்களே ஆதரித்துக்கொள்ள வேண்டும். முக்கியமானது என்னவென்றால், அனைத்து இளம் பேட்ஸ்மேன்களும் உங்கள் முதல் சீசனைப் போலவே இருக்க வேண்டும். நீங்கள் இன்னும் சீராக இருக்க வேண்டும்” என்று கூறிவுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News