இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய‍ அணி அபாரமாக செயல்பட்டு, 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 101, ஷுப்மன் கில் 112 இருவரும் சிறந்த துவக்கத்தை தந்தார்கள். அடுத்து, ஹார்திக் பாண்டியா 54 அரை சதம் கடந்தார். மேலும், விராட் கோலி 36, ஷர்தூல் தாகூர் 25 போன்றவர்களும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 50 ஓவர்களில் 385/9 ரன்களை குவித்து அசத்தியது.

Advertisement

இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் டிவோன் கான்வே 138 சிறப்பாக விளையாடி அசத்தினார். அடுத்து ஹென்ட்ரி நிகோலஸ் 42, சாண்ட்னர் 34, ப்ரேஸ்வெல் 26 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். முக்கிய வீரர்கள் பின் ஆலன் 0, டாம் லதாம் 0 ஆகியோர் டக் அவுட் ஆனதுதான், அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தயது.

இறுதியில், நியூசிலாந்து அணி 41.2 ஓவர்லகளில் 295/10 ரன்களை மட்டும் சேர்த்து, 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நியூசிலாந்து அணி 25 ஓவர்களில் 184/2 ரன்களை சேர்த்து, வலுவான நிலையில்தான் இருந்தது. அப்போது பந்துவீசிய ஷர்தூல் தாகூர் மிட்செல் 24, டாம் லதாம் 0 ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். இதனால், நியூசிலாந்து அணி 184/4 என திடீரென்று திணற ஆரம்பித்தது.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய நியூசிலாந்து அணிக் கேப்டன் டாம் லதாம், “நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. 380 ரன்களை துரத்தியபோது துவக்கத்தில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால், திடீரென்று அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், தோல்வியை தழுவினோம்.

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு, இந்தியாவில் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி இதுதான். இத்தொடர் மூலம் எங்களுக்கு புரிதல் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை கண்டுபிடித்துவிட்டோம். இனி, இதற்கேற்றாற்போல், அணியை கட்டமைத்து விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News