இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் இஷான் கிஷன் 37, அடுத்து ஹார்திக் பாண்டியா 29 ஆகியோரை தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே சேர்த்தனர். இதனால், இந்திய அணி 94/5 என திணறிக் கொண்டிருந்தது. அப்போது தீபக் ஹூடா 41, அக்சர் படேல் 31 இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்ததால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 162/5 ரன்களை சேர்த்தது.

Advertisement

இலங்கை அணியில் இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் குஷல் மெண்டிஸை 28 ரன்களை அடித்ததைத் தவிர,  நிஷங்கா 1 (3), தனஞ்ஜெயா 8 (6), அசலங்கா 12 (15), ரஜபக்சா 10 (11) என அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்தார்கள்.

இறுதியில் வனிந்து ஹசரங்கா 21, கேப்டன் ஷனகா 45 ரன்களைச் சேர்த்து, வெற்றிக்காக போராடி ஆட்டமிழந்தனர். அடுத்து கருணரத்னே, ரஜிதா இருவரும் களத்தில் இருந்தார்கள். கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பந்துவீச வந்த ஹர்ஷல் படேல் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசியும், ஒரு நோபாலையும் வீசி சொதப்பினார். இதனால், அந்த ஓவரில் 16 ரன்கள் கசிந்தது.

கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தனது கடைசி ஓவரை வீசாமல், அக்சர் படேலுக்கு அந்த ஓவரை கொடுத்தார். முதல் பந்தில் ஒயிட், மூன்றாவது பந்தில் கருணரத்னேவின் சிக்ஸர் என முதல் மூன்று பந்துகளிலேயே 8 ரன்கள் கசிந்தது. தொடர்ந்து 5ஆவது பந்தில் ரஜிதா 2 ரன்கள் ஓடும்போது ஆட்டமிழந்ததால், கடைசி பந்திற்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் கருணரத்னே ஒரு ரன்னை மட்டும் எடுத்தார். இதனால், இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி தரப்பில் ஷிவம் மாவி 4 விக்கெட்களையும், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் ஆகியோர் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார்கள்.

இப்போட்டியில் வெற்றியை பெற்றப் பிறகு பேசிய ஹார்திக் பாண்டியா, “அணிக்கு அழுத்தங்களை ஏற்படுத்த விரும்புகிறேன். ஐசிசி தொடர்களில் அழுத்தங்களை சமாளிக்க முடியாமல்தான் தோற்கிறோம். ஆகையால், இப்போதிருந்தே அழுத்தங்களை சமாளித்து விளையாட விரும்புகிறோம். இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக, ஷிவம் மாவி இன்று பந்துவீச்சில் அசத்தினார்” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News