இலங்கைக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. இதனால் இந்தியாவுக்கு 184 ரன் இலக்காக இருந்தது.

Advertisement

பின்னர் விளையாடிய இந்திய அணி 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

இதில் ஸ்ரேயாஸ் அய்யர் 44 பந்தில் 74 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 18 பந்தில் 45 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர் ), சஞ்சு சாம்சன் 25 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்த வெற்றிக்காக பேட்ஸ்மேன்களை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டி உள்ளார். மிடில் ஆர்டர் வரிசை மெய்சிலிர்க்க வைத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தொடக்க ஜோடி எளிதில் ஆட்டம் இழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் பொறுப்பை ஏற்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

அவர்களது பணி பாராட்டும் வகையில் இருந்தது. ஜடேஜாவும், ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்கள்.

Advertisement

கடைசி 5 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ரன்களை அதிகமாக விட்டு கொடுத்து விட்டனர். இதற்காக நான் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ள மாட்டேன்.ஏனென்றால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது.

முதல் 15 ஓவர்களில் பந்துவீச்சு நன்றாக இருந்தது. கடைசியில்தான் ரன் போனது. ஆட்டத்தில் இதுமாதிரியும் நடக்கலாம்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News