இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்க அணி ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தற்போது ஐபிஎல் போன்றவற்றில் விளையாடி வருவதால், அவர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்காரணமாக தென் ஆப்பிரிக்க தொடக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் மற்றும் துணைக்கேப்டனாக ரிஷப் பந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அதேபோல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கலக்கிய தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், தீபக் ஹூடா ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்டன்), தினேஷ் கார்த்திக், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஜ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ராக் மாலிக்.

வரும் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி டெல்லியில் நடைபெறவுள்ளது. அடுத்து 12ஆம் தேதி கட்டாக், 14ஆம் தேதி விசாகப்பட்டினம், 17ஆம் தேதி ராஜ்கோட், 19ஆம் தேதி பெங்களூரில் ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும்.

இந்நிலையில் இரண்டாவது போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது போட்டி நடைபெறும் கட்டாக் மைதானத்தில் 44,000 பேர் வரை அமர முடியும். இங்கு உரிய தீயணைப்பு வசதியில்லை என சஞ்சய் நாயக் என்பவர் ஒடிசாவில் உள்ள ஆனந்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Advertisement

அந்த புகாரில் பிசிசிஐ, ஒடிசா கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றையும் இணைத்து, அவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உயர்நீதி மன்றத்திலும் அதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிசிசிஐ அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. டிக்கெட் விற்பனை நடந்து முடிந்துள்ள நிலையில் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News