வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
 ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஷாய் ஹோப்புடன் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பூரன் சிறப்பாக பேட்டிங் ஆடினார்.  அரைசதம் அடித்த பூரன் 77 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 
 
மிகச்சிறப்பாக பேட்டிங் சேய்த ஷாய் ஹோப் சதமடித்தார். ஹோப்பும் பூரனும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். சதமடித்த ஹோப் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹோப்பின் சதம், பூரனின் அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 50 ஓவரில் 311  ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 
இதையடுத்து 312 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் மிக மந்தமாக பேட்டிங் ஆடி 31 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 ரன்கள் அடித்தார். 

Advertisement

3ஆம் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 63 ரன்கள் அடித்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.  சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய சாம்சன் 51 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, தீபக் ஹூடாவும் 33 ரன்னில் வெளியேற, 44.1 ஓவரில் 256 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 

Advertisement

அதன்பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேல், காட்டடி அடித்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார். 35 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

அக்ஸர் படேலின் அதிரடி அரைசதத்தால் கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் இலக்கை எட்டிய இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News