பாகிஸ்தானின் வாய்ப்பை இந்தியா பறித்துவிட்து - சோயிப் அக்தர்!

Updated: Mon, Oct 31 2022 14:24 IST
"India has been exposed in front of South Africa's quality bowling"- Shoaib Akhtar (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.டி20 உலகக் கோப்பை 2022 தொடர் சூப்பர் 12 சுற்றின் லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே தனியொருவனாக நின்று 40 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 68 ரன்களை குவித்து அசத்தினார். மற்றவர்களில் யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை. குறிப்பாக ரோஹித் ஷர்மா 15 (14), கோலி 12 (11) இருவரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடித்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 133/9 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் 1 (3), ரூஸோவ் 0 (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து வெளியேற்று கெத்து காட்டினார். தொடர்ந்து பவுமாவும் 10 (15) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து எய்டன் மார்க்கரம், மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பிட்சில் பந்துகள் ஸ்விங் ஆகாத காரணத்தினால் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை, இருவரும் அதிரடியாக எதிர்கொண்டனர். இதனால், அஸ்வினுக்கு 3 ஓவர்களை மட்டும் கொடுத்துவிட்டு, கடைசி ஓவரை வழங்கவில்லை. இந்நிலையில் 18 பந்துகளில் 25 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலை வந்தபோது வேறு வழியிம்மால், அஸ்வினுக்கு ரோஹித் ஓவரை வழங்கினார். 

மில்லர் இரண்டு சிக்ஸர் அடித்து 13 ரன்களை சேர்த்தால், தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக மாறியது. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 137/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்கரம் 52 ரன்கலையும், டேவிட் மில்லர் 59 ரன்களையும் சேர்த்தனர்.

இப்போட்டியில் வென்ற தென்ன் ஆப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் உள்ளது. பாகிஸ்தான் அணியும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோற்றால் மட்டுமே, பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும். ஆனால், இரண்டு அணிகளும் கத்துக்குட்டி அணிகளுடன் விளையாட உள்ளதால், இரு அணிகளும் இரண்டு போட்டிகளிலும் தோற்ற வாய்ப்பு மிகமிக குறைவுமான்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் அணியை இந்தியா வெளியேற்றிவிட்டது எனக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘‘தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை இந்தியா அழித்துவிட்டது. பாகிஸ்தான் மிகவும் மோசமாக விளையாடினார்கள். பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு செல்வதை அடுத்தவர்களை வைத்து தீர்மானிக்கும் நிலைக்கு வந்தது தவறு.

ஆசிய அணிகள் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் என்பதை, இந்திய அணி மீண்டும் நிரூபித்துவிட்டது. மீண்டும் இந்திய அணி வலிமையுடன் திரும்பும் என நம்புகிறேன். குரூப் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது’’ என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை