இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் டெஸ்ட் விளையாடி சொதப்பியதால், இந்தியா கடைசி நேரத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Advertisement

லக்னோ மைதானம் வேகத்திற்கும், சுழலுக்கும் சாதகமாக இருந்ததால் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் திணறினார்கள். ஆனால், இரண்டாவது போட்டி நடைபெறவுள்ள ராஞ்சி மைதானம் அப்படி கிடையாது. பேட்டர்கள், பௌலர்கள் இருவருக்கும் சம அளவில் போட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் பயமில்லாமல் விளையாடியே ஆக வேண்டும். இரண்டாவது போட்டியிலும் டெஸ்ட் விளையாடினால், பின்னடைவுதான் ஏற்படும்.

Advertisement

சுழலுக்கு சாதகமான லக்னோ மைதானத்தில் ரவி பிஷ்னோய் சிறப்பாக செயல்படவில்லை. படுமோசமாக சொதப்பி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். தோல்விக்கு இதுவும் முக்கிய காரணமாகும். இதனால், இரண்டாவது போட்டியில் ஷாபஸ் அகமது அல்லது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதைவிட முக்கியமானது இந்திய அணியின் பீல்டிங். சுலபமான கேட்ச்களை அசால்ட்டாக தவறவிடுகிறார்கள். இரண்டாவது போட்டியிலும் பீல்டிங்கில் சொதப்பினால், தோல்விதான் பரிசாக கிடைக்கும்.

தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளிலும் வென்றாக வேண்டும். காரணம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான சூப்பர் லீக் தரவரிசை பட்டியலில் 59 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த போட்டியில் வென்றால் இலங்கை (62 புள்ளிகள்), அயர்லாந்து (68 புள்ளிகள்) 69 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தை பிடித்துவிட முடியும். 

இந்த 3 போட்டிகளிலும் வென்றால் 79 புள்ளிகள் கிடைக்கும். அடுத்து, மற்ற அணிகளுடனான ஒருநாள் தொடரிலும் வென்றால் மட்டுமே 7ஆவது இடம் வரை முன்னேற முடியும். இதனால், மூன்று போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.

Advertisement

தென் ஆப்பிரிக்க அணி பேட்டர்கள், மிடில் ஓவர்களின் போது ஸ்பின்னர்களுக்கு எதிராக படுமோசமாக திணறுகிறார்கள். குல்தீப் யாதவ், ஷாபஸ் அகமது ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதால், தென் ஆப்பிரிக்கா மிடில் ஓவர்களின்போது சொதப்ப வாய்ப்புள்ளது. இந்த கண்டத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா தப்பித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

மற்றபடி பந்துவீச்சில் அந்த அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ராஞ்சி பிட்சில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிற்கும் சம அளவில் ஒத்துழைப்பு இருக்கும். இந்த மைதானத்திலும் தென்னாப்பிரிக்க பௌலர்கள் அசத்தும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காதான் முழு ஆதிக்கம் செலுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உத்தேச அணி

Advertisement

இந்தியா - ஷிகர் தவான், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய்/ வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், அவேஷ் கான்.

தென் ஆப்பிரிக்கா - ஜென்மன் மலான், குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •          விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென்
  •          பேட்டர்ஸ் - சுப்மான் கில், டேவிட் மில்லர், ஷ்ரேயாஸ் ஐயர்
  •          ஆல்-ரவுண்டர்கள் - ஷர்துல் தாக்கூர், வெய்ன் பார்னெல்
  •          பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News