இலங்கை தொடரிலிருந்து சூர்யா, சஹார் விலகல்!

Updated: Wed, Feb 23 2022 11:57 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் இரு அணிகளுக்க்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை லக்னோவில் நடைபெறுகிறது. இத்தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். 

ஏற்கெனவே கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காத நிலையில், தற்போது மேலும் இருவர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை