தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், மற்றும் டி20 தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானாது இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை முதலில் பந்துவீச அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தயாளான் ஹேமலதா 12 ரன்களுக்கும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 17 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 99 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மா ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 6ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்பின் 37 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி சர்மா விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி சதம் கடந்திருந்த ஸ்மிருதி மந்த 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 117 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பூஜா வஸ்திரேகர் 37 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழாகாமல் இருந்தார். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்கா காகா 3 விக்கெட்டுகளையும், மசபடா கிளாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்த்து கடின இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் லாரா வோல்வார்ட் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய போஷ்க் 5 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் 18 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய சுனே லூஸ் மற்றும் மரிஸான் கேப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் மரிஸான் கேப் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து சுனே லூஸும் 24 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் சினொலா ஜாஃப்டா 27 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டி பெவிலியன் திரும்பினர். இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய மகளிர் அணி தர்பபில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News