ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு!

Updated: Sat, Apr 10 2021 19:12 IST
IPL 2021: Delhi Capitals opt to bowl (Image Source: Google)

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 14ஆவது சீசன் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.

இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்முறை சாம்பியனும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

மும்பையிலுள்ள வான்கேடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டியில் கரோனா நெறிமுறைகள் காரணமாக இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறமாட்டார்கள் என்பதால், இரு அணிகளும் இந்திய பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பியுள்ளனர். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, டூ பிளெசிஸ், எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, சாம் கரன், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மையர், கிறிஸ் வோக்ஸ், டாம் கரன், ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை