ஐபிஎல் 2021: கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு- ரிஷப் பந்த் சூளுரை!

Updated: Sat, Sep 18 2021 21:45 IST
IPL 2021: Our ultimate goal is to win the trophy, says DC skipper Rishabh Pant (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு பயிற்சியில் களமிறங்கியுள்ளன.

மேலும் நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளுடனும் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், நடப்பு சீசனில் வெற்றிபெற்று கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தனிமைப்படுத்துதலிற்கு பிறகு சக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது மகிழ்ச்சியாகவுள்ளது. மேலும் நடப்பு சீசனில் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு. அதனால் நாங்கள் எங்கள் செயல்பாட்டில் கவனம் செலுத்தப் போகிறோம். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஐபிஎல் 2021 சீசனின் முதல் பாதியில் நாங்கள் விளையாடிய விதத்தில் தொடர்ந்து விளையாடவுள்ளோம். அப்படி விளையாடும் பட்சத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை