ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!

Updated: Sat, Sep 25 2021 23:13 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 27 ரன்களைச் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கைத் துரத்திய ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஹா 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 

இருப்பினும் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றிபெற 17 ரன்கள் என்ற கடின இலக்கு இருந்தது. ஆனால் நாதன் எல்லீஸ் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சரை மட்டுமே ஹோல்டரால் ஒரு சிக்சரை மட்டுமே அடிக்க முடிந்தது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இதில் பஞ்சாப் அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை