ஐபிஎல் 2021: அதிரடியில் மிரட்டிய பந்த், ஷா; சிஎஸ்கேவிற்கு 173 ரன்கள் இலக்கு!

Updated: Sun, Oct 10 2021 21:16 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - பிரித்வி ஷா இணை களமிறங்கியது. இதில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரித்வி ஷா அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் 60 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்து வந்த அக்ஸர் படேலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிம்ரான் ஹெட்மையர் - ரிஷப் பந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஹெட்மையர் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 51 ரன்களைச் சேர்த்தார். சிஎஸ்கே அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை