ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 58 ரன்களை சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹென்றிக்ஸ், முகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் - மயங்க் அகவர்ல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த மயங்க் அகர்வால் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், சர்ப்ராஸ் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின் அரைசதம் கடந்திருந்த மயங்க் அகர்வாலும் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களும் சரிவர சோபிக்காததால், பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.