ஐபிஎல் 2021: ஹோல்டர் பந்துவீச்சில் நிலைகுலைந்த பஞ்சாப்!

Updated: Sat, Sep 25 2021 21:22 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கல் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரமும் 27 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை