கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது முதல்முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. 

Advertisement

ஆனால் அதன் பின்னர் தற்போது பலமாக திரும்பியுள்ள சிஎஸ்கே அணி இந்த தொடரில் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கைவசம் மீதும் 7 போட்டிகள் இருக்கும் வேளையில் மூன்று போட்டிகளை வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

Advertisement

அந்த வகையில் நிச்சயம் சிஎஸ்கே அணி இம்முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு இறுதிப்போட்டியில் விளையாடி வெற்றி பெறும் அளவிற்கு வலுவாக உள்ளது. இந்தியாவில் தொடங்கி ஒத்திவைக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகள் தற்போது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

இந்த இரண்டாம் பாதி தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த முதல் போட்டியில் சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரரான டூ பிளெசிஸ் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் கரீபியன் லீக் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் மாற்று துவக்க வீரராக ராபின் உத்தப்பா விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட உத்தப்பா இதுவரை சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை என்றாலும் தற்போது முதன்முறையாக சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதுவரை உத்தப்பா 189 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,607 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வாய்ப்புக்காக காத்திருந்த உத்தப்பா இந்த வாய்ப்பினை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News