Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Robin uthappa

தோனி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும் - ராபின் உத்தப்பா!
Image Source: Google

தோனி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும் - ராபின் உத்தப்பா!

By Bharathi Kannan March 15, 2024 • 14:31 PM View: 68

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். 

இப்போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களும், காணொளிகளும் நாளுக்கு நாள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Related Cricket News on Robin uthappa