ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை  தேர்வு செய்தார்.

Advertisement

இந்த போட்டியில் டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், கேகேஆர் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியுள்ளன.

Advertisement

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆரோன் ஃபின்ச்சை 2ஆவது ஓவரிலேயே வெறும் 3 ரன்னுக்கு போல்டாக்கி அனுப்பினார் சேத்தன் சகாரியா. அதன்பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இருவருமே தலா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திரஜித்தை வீழ்த்திய சுனில் நரைன், அதற்கடுத்த பந்திலேயே சுனில் நரைனை டக் அவுட்டாக்கி அனுப்பினார்.

அதன்பின்னர் பொறுப்புடன் ஆடி 42 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயரையும், அதற்கடுத்த பந்திலேயே ஆண்ட்ரே ரசலையும்(0) குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 3 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு 4வது ஓவர் வீசும் வாய்ப்பை டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் வழங்கவில்லை. 

இதனால் 13.4 ஓவரில் வெறும் 83 ரன்களுக்கு கேகேஆர் அணி 6 விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், பொறுப்புடன் அடித்து ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ராணா, கேகேஆரின் மானத்தை காப்பாற்றினார். ராணா 34 பந்தில் 57 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 146 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 147 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிற டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிரடி வீரர் பிரித்வி ஷா, உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்திலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

அதன்பின் வந்த மிட்செல் மார்ஷும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னரும் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க அவரைத் தொடர்ந்து லலித் யாதவ் 22, ரிஷப் பந்த் 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் வந்த அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ரோவ்மன் பாவல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News