ஐபிஎல் 2022: ஹர்திக், மில்லர் அதிரடி; ராஜஸ்தானுக்கு 193 இலக்கு!

Updated: Thu, Apr 14 2022 21:17 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் மேத்யூ வேட் 12, விஜய் சங்கர் 2, சுப்மன் கில் 13 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா - அபிநவ் மனோகர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிநவ் மனோகர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனாலும் மறுமுனையில் ஹர்திக் பாண்டியா தனது அதிரடியைத் தொடர்ந்து. அவருடன் இணைந்த டேவிட் மில்லரும், குல்தீப் சென் வீசிய 19ஆவது ஓவரில் 21 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 87 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை