ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் மொத்தம் 185 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள்.

Advertisement

மீதமுள்ள 786 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறாத வீரர்கள். இதில் கத்துக்குட்டி நாடுகளை சேர்ந்த 20 பேர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் இந்தியாவை சேர்ந்த 19 சர்வதேச வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை கொடுத்திருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 166 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற உள்ளனர். 

Advertisement

மேலும் சர்வதேச அனுபவம் இல்லாத, ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் 91 பேர் இந்த ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாமல் ஏற்கனவே ஐபிஎல் சீசன்களில் பங்கு பெற்ற மூன்று வெளிநாட்டு வீரர்களும் இந்த மினி ஏலத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாத 604 இந்திய வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். 

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாத 88 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெறுகிறார்கள். ஒட்டு மொத்தமாக 277 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெறுகிறார்கள். இதில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து 14 வீரர்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து 57 வீரர்களும், வங்கதேசத்திலிருந்து ஆறு வீரர்களும், இங்கிலாந்திலிருந்து 31 வீரர்களும் அயர்லாந்தில் இருந்து 8 வீரர்களும், நமிபியாவில் இருந்து 5 வீரர்களும் ,நெதர்லாந்தில் இருந்து 7 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 27 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து இந்த இரண்டு வீரர்களும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும் ,இலங்கையில் இருந்து 23 வீரர்களும், யூ ஏ யில் இருந்து 6 வீரர்களும், வெஸ்ட் இண்டீஸிலிருந்து 33 வீரர்களும், ஜிம்பாப்வேவிலிருந்து 6 வீரர்களும் தங்களது பெயரை ஐபிஎல் மினி ஏலத்திற்காக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக ஒரு அணியில் 25 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே சில வீரர்கள் தக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மொத்தமே அதிகபட்சமாக 87 வீரர்கள் தான் ஐபிஎல் மினி ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக 991 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற விருப்பம் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எந்த வகையில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News